அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.)
இன்ஷா அல்லாஹ்,
பாக்கம் கோட்டூர் மக்கள்நல மேம்பாட்டு சங்கம் சார்பில் பாக்கம் கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமது கல்வி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு மேற்கொண்டு தமது வாழக்கை பயணத்தினை மேற்கொள்ளவுள்ள மாணவ சமூகத்திற்கு வழிகாட்டியாக "கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
அதுசமயம் துறைசார் ஆளுமை நிறைந்த பிரபலங்கள் எதிர்வரும் எமது தலைமுறைக்கு வழிகாட்டும் விதமாக ஆரோக்கியமான பல ஆலோசனைகளையும், அறிவுரைகளும் வழங்கி அவர்களுக்கு திறன்சார் பயிற்சிக்கான முன்முயற்சிகளையும் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
ஆகவே! பெற்றோர்கள் தமது 18வயதிற்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த பிள்ளைகளை இந்த அறிய வாய்ப்பினை நுகர்ந்து பயனடைய செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
தற்காலத்தில் பெருகி வரும் வேலைவாய்ப்பின்மை, மற்றும் துறைசார்பு திறன்களில் ஏற்படும் தொய்வை களைந்து மாணவர்கள் எந்தெந்த துறைகளில் அதிதிறன் கொண்டிருக்கின்றார்களோ அந்த திறன்களை அவர்களுக்கு அடையாளம் காட்டி அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் திறனறிவை மேம்படுத்தி வெற்றிகொள்ளும் சமூகமாக அவர்களை மடைமாற்ற கிடைக்கும் ஓர் வாய்ப்பை நம் மாணவச் செல்வங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம்.
மாணவர்கள் தன்னம்பிக்கையை மிளிரச் செய்து இனி எதிர்வரும் காலத்தில் ஆரோக்கிய சூழலியல் வாழ்வினை அவர்களுக்கு வழங்கி அதன்மூலம் ஒட்டுமொத்த சமூகமும் பயனடைய அனைத்து மாணவர்களும் ஊக்கமுடன் பின்வரும் வலைத்தொடர்பை கிளிக்கி தம்மை அந்நிகழ்ச்சிக்கான பங்கேற்பாளராக முன்பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScot-lf9hV_frJUfNcUYjmSZfhHtH6Ykqj8-ngT0VhAzd1EBg/viewform
இந்த வலைத்தொடர்பை COPY PASTE செய்து உங்களது முன்பதிவை தொடங்கவும்.
மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
பதிலளிநீக்குTamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News