அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.),

பாக்கம் கோட்டூரில் கடந்த ௦08/02/2014 முதல் நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம்  வரை நமதூர் வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து செயல்பட துவங்கியுள்ளது என்பதை மகிழ்வோடு தெரியப்படுத்துகிறோம், மேலும் நமதூர் வழித்தடத்தில் இத்துடன் மூன்று பேருந்துகள் இயக்கப்படுகிறது.

புதிய பேருந்தின் முன் புறத்தோற்றம் 


பல ஆண்டுகளாக ஒரு பெரும் குறையாகவே இருந்து வந்த பேருந்து வசதிகள் தற்போது நமக்கு கிடைக்கப் பெற்று வருவதால் நம் மக்கள் தமது வாழ்வாதார தேவைகளை நிறைவேற்றும் வண்ணம் பல ஊர்களுக்கு சென்று வருவதற்கும், தமது கொள்முதல் தேவைகளை பெருக்கிக் கொள்வதற்கும் இந்த பேருந்து வசதிகள் பெரும் முத்தாய்ப்பாக அமையப்பெரும் என்பதில் நாம் பெரு மகிழ்வு அடையலாம்
. இதனால் நமதூரின் அன்றாட மற்றும் அத்தியாவசிய தேவைகளின் குறைபாடுகளின் காரணமாய் நமதூரில் இருந்து புலம் பெயர்வு அடைந்த நமதூர் மக்கள் மீண்டும் நமதூரில் குடியேற்றம் பெறவும் நிறைய வாய்ப்புகள் உள்ளது. இது போன்ற வசதிகளை நமதூரில் ஏற்படுத்தித் தர முயற்சித்த அனைத்து நல்ல இதயங்களையும் பாராட்டி அவர்களுக்கு பிரார்த்திப்போம்.





மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த தளம் பற்றிய தங்களின் மேலான கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன.