அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

வியாழன், 10 செப்டம்பர், 2015

உலகை உலுக்கிய சிரியாவின் சிறு குழந்தை...



துருக்கிய கடற்பரப்பில் மூழ்கிய மூன்று வயது சிரிய நாட்டுச் சிறுவனின் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


துருக்கியிலிருந்து கிரீஸை அடைய முயன்ற சிரிய நாட்டவர் சென்ற படகுகள் மூழ்கியதால் இந்தச் சிறுவன் உட்பட 12 பேர் துருக்கிக் கடற்பரப்பில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஐரோப்பாவில் எங்கேனும் தஞ்சம் அடைய ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்ட அவர்களது உடல்கள் தற்போது மீண்டும் சொந்த நாட்டுக்கு கொண்டு செல்லும் பணிகள் நடந்து வருகிறது.
துருக்கி கடற்கரையில் ஒதுங்கிய சிரியாவைச் சேர்ந்த குழந்தையின் உடலும், அதை கையிலேந்திச் சென்ற போலீஸும் அடங்கிய புகைப்படம், உலக மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல், வளர்ந்த நாடுகளின் அலட்சியப் போக்கையும் கை உயர்த்தி கேள்வி கேட்கும் வகையில் அமைந்துவிட்டது.