அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

சனி, 28 டிசம்பர், 2013

புதிய மதரஸா கட்டிட திறப்பு விழா

இடம் : பாக்கம் கோட்டூர்

தேதி : 28/12/2013

புதிய மதரஸா கட்டிட திறப்பு விழா இன்ஷா அல்லாஹ்  எதிர்வரும் 2014 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி காலை 10 மணியளவில் மதரஸா நிர்வாக குழுவினரால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்பதை உலகளாவிய கோட்டூர்வாசிகளுக்கு தெரியப் படுத்திக்கொள்கிறோம். இது குறித்து மதரஸா நிர்வாக குழுவினர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

            இட மாற்ற அறிவிப்பு

கண்ணியத்திற்குரிய நமது ஊர் ஜமாத்தார் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.).

நபிமொழி : பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் அழகிய நல்லொழுக்கத்தை விட உயர்தரமான அன்பளிப்பு வேறொன்றும் இல்லை.

இறையருளால் நமதூர் மற்றும் அயல் ஊர் பெண் பிள்ளைகளின் மார்க்க கல்வி வளர்ச்சிக்காக நமதூர் சங்கம் கட்டிடத்தில் செயல் பட்டு வந்த மதரஸா
நிஸ்வான் பெண்கள் அரபி கல்லூரி இன்ஷா அல்லாஹ் மேற்குறிப்பிட்ட புதிய மதரஸா கட்டிடத்தில் செயல் பட உள்ளது.

மதரஸா நிர்வாகத்தினரால் வெளியிடப்பட்ட அறிவிப்பு 


சென்னை ஐக்கிய நல கூட்டமைப்பின் வழிகாட்டுதலின் படி இந்த மதரஸா மன்பவுள் உலூம் அரபி கல்லூரி செயல் பட்டு வந்தது.

இன்ஷா அல்லாஹ் புதிய கட்டிடத்தில் இட மாற்றத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய இருப்பதால் முதலாவதாக வருகின்ற ஜனவரி இரண்டாம் தேதி வியாழன் அன்று குரான் மஜ்லிஸ் நடைபெற இருக்கிறது அது சமயம் உள்ளூர் வெளியூர் ஜமாத்தினர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க அழைக்கிறோம்.
மதரஸா வேலைகள் முழுமையாக பூர்த்தியடைய ஜமாத்தினர் தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி அல்லாஹ்வினுடைய பொருத்தத்தையும் அன்பையும் பெற அழைக்கின்றோம் என நமதூர் மதரசா நிர்வாக குழுவினரால் அழைப்பு விட பட்டுள்ளது.  

புதிய மதரஸா கட்டிடம் 





மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.