எனது அருமை கொட்டூர்புரத்து கனவான்களே,சீமாட்டிகளே.
இதுவரையிலும் நீங்கள் கண்டு பார்த்த இந்த வலைபூவினை இன்னும் மெருகேற்றும் விதமாக பலதரப்பட்ட புகைப்படங்களையும்,புதிய தகவல்களையும் நமது ஊரில் இருக்கும் அன்பு உள்ளங்கள் வெளிநாட்டு வாழ் நமதூர் பிரஜைகளுக்காக இந்த பக்கத்தில் பதியபடுதுமாறு வேண்டுகிறேன்.நேரமின்மை காரணமாய் என்னால் சிறிது காலத்திற்கு பல புதிய தகவல்களை தங்களோடு பதிய படுத்த முடியவில்லை மன்னிக்கவும்,இன்னும் இன்ஷா அல்லா வரும் கால இடைவெளியில் நான் தாயகம் செல்ல எத்தனித்து இருப்பதால் சிறிது காலம் இந்த வலை பதிவிற்கு வர இயலாமை தவிர்க்க முடியாதது, இன்ஷா அல்லாஹ் தாயகத்தில் எனக்கு கிடைக்கும் இனிய அனுபவங்களையும் தங்களோடு இனிவரும் வலைபதிவில் அறிவிக்கலாம் என எண்ணுகிறேன்.இன்ஷா அல்லாஹ் எனது பயணம் இனிதாய் அமைய இறைவனிடம் வேண்டுமாறு அன்போடு தங்களை வேண்டுகிறேன்.
தங்களிடம் பாகை நிலத்தின் ( பாக்கம் கோட்டூர் )இனிய புதிய தகவல்கள் இருப்பின் தங்களை facebook பகுதியில் பாக்கம் கோட்டூர் பகுதியைதங்களோடு இணைத்து கொண்டு மாபெரும் ஒரு தகவல் பரிமாற்றத்திற்கு தங்களை தயார் படுத்தி கொள்ளுமாறு விரும்புகிறேன்.
இதுவரை facebook பகுதியில் தங்களை இணைத்துகொண்டவர்களோடு தகவல் பரிமாற்றங்களை நம் சொந்தங்கள் எற்படுதிகொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன்..,
இன்ஷா அல்லாஹ் தொடர்வேன்.,
உங்களை இந்த வலை பகுதியில் தொடுவேன்.,
உங்களின் ..,
பாகை இறை அடியான் ..,