அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

திங்கள், 9 ஜனவரி, 2012

பாக்கம் கோட்டூர் FB சகோதரர்களுக்கு புதிய தலைமை பற்றிய அறிவிப்பு..

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


அன்புக்குரிய பாக்கம் கோட்டூர் FB -சகோதரர்கள் அனைவருக்கும்..


அஸ்ஸலாமு அலைக்கும் ... வரஹ்..

அல்லாஹ் அருளால் நமது FB PKTR சகோதரர்கள் - ஒருங்கிணைக்கப் பட்டு -இதற்க்கு ஒரு அட்மின் கமிட்டியும் (தற்காலிகமாக) அமைக்கப் பட்டது. ஒரு டிரஸ்ட் அல்லது association ஏற்படுத்தி பைத்துல்மால் அமைப்பு போல செயல்பட்டு கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டும், மேலும் பல நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் - என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருந்து வந்ததை அவ்வப்போது வெளிப் படுத்தி வருகிறோம்.. இவற்றை முறைப் படுத்தி செயல்படுத்த இந்த (மேலாண்மை) அமைப்புக்கு வழிகாட்டும் தலைமை அவசியம் என்பதை நாம் உணர்கிறோம்.. இஸ்லாம் தலைமையை வலியுறுத்துகிறது.. இரண்டு பேர் இருந்தாலே அவர்களில் ஒருவரை தலைவராகக் கொண்டு செயல்பட வழி காட்டுகிறது... கருத்துக்களை ஆய்ந்து .. சரியான கருத்துக்களை ஒருங்கிணைத்து முடிவான ஒரு கருத்தை வெள...ியிடவும்.. அனைவரும் அதனை ஏற்றுக் கொள்ளவும்.. ... கருத்து முரண்கள் ஏற்படும்போது .. அவற்றை சரி செய்யவும் .. ஒருமித்தக் கருத்தினை ஏற்படுத்தவும்.. தலைமை அவசியம். இதனால் ... நமக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துச் செயல்பட வேண்டும்.. இது தொடர்பாக அட்மின் கமிட்டியில் கருத்துப் பரிமாறப் பட்டு - பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஒருமித்தக் கருத்து அடிப்படையில் சகோதரர் Haji Muhammad ஹாஜி முஹம்மது அவர்கள் (புருனை) - கவுரவ தலைவராகவும்,


சகோ.முனைவர்,ஜனாப். ஹாஜி முஹம்மது அவர்கள்.
சகோதரர் Abdul Aziz Mohamed Ismail அப்துல் அஜீஸ் முஹம்மது இஸ்மாயில்

அவர்கள் (சிங்கை) - (செயல்) தலைவராகவும்

ஜனாப்.முஹம்மது இஸ்மாயில் அவர்கள்(இடது ஓரம் அமர்ந்திருப்பவர்) அருகே மேலான்குழு உறுப்பினர்.ஜனாப்.அப்துல் ஜப்பார் அவர்கள்.
தேர்ந்து எடுக்கப் பட்டு இருக்கிறார்கள்..என்பதை FB -PKTR அட்மின் ஒப்புதலோடு தெரிவித்துக் கொள்கிறோம். அல்லாஹ் அருளால் இனி இவர்களின் இனிய வழிநடத்துதலின் அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல் படுவோமாக ... அல்லாஹ் நம் அனைவரையும் நேரான வழியில் நடத்தி அருள்வானாகவும்... வஸ்ஸலாம்