அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

சனி, 31 டிசம்பர், 2011

அஸ்ஸலாமு அலைக்கும்..


அன்பிற்கினியீர்,நீண்ட நெடிய ஒரு இடைவெளிக்குப் பின்னர் தங்களை சந்திப்பதில் நிகரில்லா பேரானந்தம் அடைகிறோம்.இந்த நொடிப் பொழுதில் சகோதரர் ஜனாப்.ஆர்.எம்.இஸ்மாயில் மற்றும் அவர்தம் சகோதரர்கள் ஜனாப்.ஜமால் முஹம்மது மற்றும் ஜனாப்.முஹம்மது சாதிக் ஆகியோரை பாராட்டியாக வேண்டும்.இளைய தலைமுறையினரின் கல்வி வழிகாட்டியாக அவர்கள் தற்போது மேற்கொண்டிருக்கும் பணிகள் மிகவும் இன்றியமையாதவை.அவர்களின் இந்த பணி இனிவரும் தலைமுறையினரின் கல்வியில் ஒரு மாற்றத்தினையும்,புரட்சியையும் ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை,இது போன்ற ஒரு சிந்தனை புரட்சியை தான் இந்த ஊரின் நலம் விரும்பிகளான நாங்களும் எதிர்பார்த்து காத்து இருந்தோம்.ஒரு சொல்ல மறந்த கதையை கண் முன் நிழலாட செய்துள்ளனர் இந்த சகோதரர்கள்.ஆம் நல் உள்ளம் கொண்ட இவர்களால் இன்று ஏழ்மை நிலையால் எட்டா கனியாகிப் போன கல்வியை இவர்கள் தம் தந்தையார் மர்ஹூம்.ராஜ் முஹம்மது அவர்கள் பெயரில் ஒரு அறக் கட்டளை அமைத்து ஏழை மாணவர்களை பொருளாதார ரீதியிலும்,மன ரீதியிலும் ஊக்கப் படுத்தி அவர்களுக்கு உதவ முன் வந்துள்ளனர்.எல்லா புகழும் இறைவனுக்கே ஆகும். இந்த பாராட்டுதல்களை அவர்கள் விரும்பாவிட்டாலும் ஊர் நலனில் அக்கறை கொண்டு அவர்கள் ஆற்றிய பணியினை நாம் பாராட்டி இறைவனிடத்தில் நாம் பிரார்த்திப்போம்.இது போன்ற இன்னும் பல புரவலர்கள் பல தொண்டு பணிகளை மேற்கொண்டு மற்ற ஊர்களுக்கு முன்னோடியாய் நம் ஊரை மாற்றி நம் எதிர் கால தலைமுறையினரை அறிவிற் சிறந்தோராய் ஊர் புகழ் பரப்பும் உத்தமராய் விளங்கச் செய்ய வல்ல ரஹ்மான் தனது பெரும் பாக்கியத்தை அருள் வானாகவும் ஆமீன்.

புகைப்பட உதவி. சகோ.நவ்ஷாத் அலி