அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

எனது அருமை கொட்டூர்புரத்து கனவான்களே,சீமாட்டிகளே.
இதுவரையிலும் நீங்கள் கண்டு பார்த்த இந்த வலைபூவினை இன்னும் மெருகேற்றும் விதமாக பலதரப்பட்ட புகைப்படங்களையும்,புதிய தகவல்களையும் நமது ஊரில் இருக்கும் அன்பு உள்ளங்கள் வெளிநாட்டு வாழ் நமதூர் பிரஜைகளுக்காக இந்த பக்கத்தில் பதியபடுதுமாறு வேண்டுகிறேன்.நேரமின்மை காரணமாய் என்னால் சிறிது காலத்திற்கு பல புதிய தகவல்களை தங்களோடு பதிய படுத்த முடியவில்லை மன்னிக்கவும்,இன்னும் இன்ஷா அல்லா வரும் கால இடைவெளியில் நான் தாயகம் செல்ல எத்தனித்து இருப்பதால் சிறிது காலம் இந்த வலை பதிவிற்கு வர இயலாமை தவிர்க்க முடியாதது, இன்ஷா அல்லாஹ்  தாயகத்தில் எனக்கு கிடைக்கும் இனிய அனுபவங்களையும் தங்களோடு இனிவரும் வலைபதிவில் அறிவிக்கலாம் என எண்ணுகிறேன்.இன்ஷா அல்லாஹ் எனது பயணம் இனிதாய் அமைய இறைவனிடம் வேண்டுமாறு அன்போடு தங்களை வேண்டுகிறேன்.
தங்களிடம் பாகை நிலத்தின் ( பாக்கம் கோட்டூர் )இனிய புதிய தகவல்கள் இருப்பின் தங்களை facebook பகுதியில் பாக்கம் கோட்டூர் பகுதியைதங்களோடு இணைத்து கொண்டு மாபெரும் ஒரு தகவல் பரிமாற்றத்திற்கு தங்களை தயார் படுத்தி கொள்ளுமாறு விரும்புகிறேன்.
இதுவரை facebook பகுதியில் தங்களை இணைத்துகொண்டவர்களோடு தகவல் பரிமாற்றங்களை நம் சொந்தங்கள் எற்படுதிகொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன்..,

இன்ஷா அல்லாஹ் தொடர்வேன்.,
உங்களை இந்த வலை பகுதியில் தொடுவேன்.,
உங்களின் ..,
பாகை இறை அடியான் ..,

செவ்வாய், 20 ஜூலை, 2010

போலி கவுரவம் பொல்லாதது

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

கணவரும், மனைவியும் தாங்கள் வளர்த்து வந்த கழுதையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.


"யாராவது ஒருவர் கழுதை மீது அமர்ந்து செல்லலாமே'' என்றார் அவ்வழியே சென்ற ஒருவர். அதனால் கணவர் கழுதை மீது ஏறி உட்கார்ந்தார்.


"கொடுமைக்கார புருஷனாக இருப்பார் போலும். தான் மட்டும் சுகமாக அமர்ந்து கொண்டு மனைவியை நடக்க விடுகிறார்'' என்றார் இன்னொருவர். இப்போது மனைவியை அமரவைத்து கணவர் நடக்க ஆரம்பித்தார்.


"புருஷனை மதிக்காதவள். திமிராக கழுதை மீது அமர்ந்து செல்கிறாள்'' என்ற மற்றொருவரின் கமென்ட்டைத் தொடர்ந்து கணவரையும் தன்னுடன் ஏற்றிக் கொண்டாள் மனைவி.


"கொஞ்சமாவது ஈவு, இரக்கம் இருந்தால் பாவம் இந்த கழுதையை இப்படி கஷ்டப்படுத்துவார்களா?'' என்றார் வேறொருவர்.

இறுதியில் கணவர் மனைவி இடையே சண்டை வந்து விட்டது. "உங்களால்தான் இந்த அவமானம்'' என்றார் மனைவி. "உன்னால் என் கவுரவமே போச்சு'' என்றார், கணவர்.

நம் வாழ்வில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடுத்தவர்கள் சொல்வதை கேட்பதும், போலி கவுரவவுமே முக்கியக் காரணம்.

போலி கவுரவம் மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலே தானாகவே ஏற்பட்டு விடுகிறது. ஓடிக் கொண்டிருக்கும் சிறுவன் கால்தடுக்கி விழுகிறான். யாராவது பார்த்து விட்டார்களா என இங்குமங்கும் பார்க்கிறான். யாரும் பார்க்க வில்லையென்றால் எழுந்து, துடைத்துக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறான். யாராவது பார்த்து விட்டால், அதுவும் சிரித்து விட்டால் போச்சு. அசிங்கம், அவமானம்! கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. தடுக்கி விழுவது கூட பெருங்குற்றம் என பிஞ்சு மனம் நம்புகிறது.

உலகில், போலி கவுரவத்தின் தலைமையகம் அமெரிக்காதான் என்றால் அது மிகையல்ல. அடுத்த பத்தாண்டுகளுக்கு கிடைக்கக் கூடிய எல்லா கடன் சலுகைகளையும் இப்போதே பெற்று நீயா, நானா என்று போட்டி போட்டு கவுரவம் பார்ப்பதில் அமெரிக்கர்கள் கில்லாடிகள். கிடைக்கிறது என்பதற்காக சக்தியை மீறி வாங்கிய வீட்டுக்கடன்களில் திவாலாகி, "அமெரிக்காவில் வீடு வேண்டுமா? ரொம்ப சீப்'' என்று இங்கு டீக்கடை முன்பு நில புரோக்கர்கள் கிண்டலாக கேட்கும் அளவுக்கு கடந்த ஆண்டு அங்கு பெரும் நெருக்கடி.

"என்னை அடியுங்கள், உதையுங்கள், சாகடியுங்கள்; ஆனால் மற்றவர் முன் அவமானப்படுத்தாதீர்கள்'' என்ற வேண்டுகோள் நம் சமூகத்தில் பிரபலம். விசாரணையின்றி, பொறுமையின்றி மிருகத்தனமாக நடந்துகொள்ள குடும்பத்தினருக்கு அனுமதி உண்டு. ஆனால் அதை மற்றவர்கள் பார்க்க மட்டும் கூடாது என்ற 'கவுரவ நிலைப்பாடு' இங்கு வேரூன்றி விட்டது.

இந்த போலி கவுரவம் படித்தவர்களையும் வாட்டி எடுக்கும் சக்தி கொண்டது.

"சக மாணவர்கள் முன் ஆசிரியர் என்னை திட்டி விட்டார்; அதனால் எனக்கு அவமானமாக இருந்தது'' என்று அம்மாவிடம் பையன் புலம்பினால் அது போலி கவுரவத்தின் அறியாப்பருவம். "இன்னொரு டீச்சர் முன்பு என்னைக் குறை சொல்லாதீங்க சார். என் கவுரவம் என்னாவது?'' என்று ஒரு டீச்சரே தலைமையாசிரியரிடம் குறைபட்டுக் கொள்வது போலி கவுரவத்தின் விபரீத வளர்ச்சி. தவறு தவறுதான். அதை யார் சொன்னால் என்ன? எங்கு சொன்னால் என்ன? அதற்கும் கவுரவத்திற்கும் என்ன சம்பந்தம்?

நாம் கவுரவமானவர்கள் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் அணியும் செருப்புக்கு எப்படி தெரியும்? பலர் மத்தியில் செருப்பு ரிப்பேராகிறபோது அதை தூக்கிப் போட்டு விட்டு வெறுங்காலோடு நடந்தால் சுமார் கவுரவம்; விலை உயர்ந்தது, சரி செய்து விடலாம் என அச்செருப்பை கையில் ஏந்தியபடி, தலைநிமிர்ந்து நடந்தால் சூப்பர் கவுரவம். இதை விடுத்து, பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக காலை தரையில் தேய்த்தபடி நடந்து வந்து வண்டியில் ஏறினால், அது போலி கவுரவம்.

பாழாய்ப்போன டூவீலர் என்ஜின் திடீரென எக்குத்தப்பாகி பெட்ரோலைக் குடித்து விடுகிறது. வண்டி பாதி வழியில் நின்று விடுகிறது. மனைவி ஒரு பக்கம், மற்றவர் ஒரு பக்கம், அவ்வளவுதான். போயே விட்டது நாம் கட்டிக்காத்த கவுரவம்! அருகில் உள்ள பெட்ரோல் 'பங்க்'குக்கு வண்டியைத் தள்ளிச் சென்றால் உடலுக்கு கவுரவம்தான். ஆனால் உள்ளத்துக்கும், உடன்வரும் செல்லத்துக்கும் அது கவுரவக் குறைச்சல் ஆயிற்றே. "என்ன ஆச்சு?'' என்று ஏதோ வண்டியில் குண்டு வெடித்த மாதிரி சிலர் கேட்பார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்தால், அது போலி கவுரவம். வண்டி பிரச்சினைக்கும், வாழ்க்கை கவுரவத்திற்கும் என்ன தொடர்பு? - யோசித்துப் பாருங்கள்.


சாப்பிடாவிட்டால் கூட சிலரின் உடல் வஞ்சனை இன்றி வளர்ந்து விடுகிறது. இதற்காக உடலின் அளவைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டுமேயன்றி, 'எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள்' என்று கவுரவம் பார்த்து வெளியில் வருவதைக் குறைக்கக் கூடாது. வீட்டுக்கு போலீஸ் வருவது பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பாகத்தானே. இதில் 'மற்றவர்கள் வேறுமாதிரி நினைத்து விடப்போகிறார்கள்' என பயப்படுவது ஏன்?

இப்படி எங்கும் எதிலும், எப்போதும் பெரியவர்கள் கூட கவுரவம் பார்ப்பதால் இளைய தலைமுறையும் இதையே பின்பற்றி, தன் திறமையை வெளிக்கொண்டு வர தயங்குகிறது. 'உனக்கு தெரிந்ததைப் பேசு' என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னால் 'சரியாகப் பேசவில்லையென்றால் எல்லோரும் தவறாக நினைப்பார்கள்' என்று சிறுவர்கள் பயப்படுகின்றனர். 'யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. முடிந்தவரை முயற்சி செய்' என்று அவர்களை ஊக்கப்படுத்தினால்தான் நாளைய இன்டர்விïக்களை அவர்கள் வெல்ல முடியும். 'ஊக்குவிப்பார் யாரும் இல்லையெனினும், குறைசொல்வோருக்கு குறைவில்லை'' எனும் நிலை ஆபத்தானது.

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

தன்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்காக 'பபே' விருந்துக்கு ஏற்பாடு செய்தது ஒரு வங்கி. ஒரு கையில் தட்டு; மறுகையில் இரண்டு ஸ்பூன்கள். சப்பாத்தி, சிக்கன் என போர்க் ஸ்பூனுக்குள் சிக்காத அயிட்டங்கள். பலமாகக் கொத்தினால் போட்டிருக்கும் கோட்டுக்குள் குழம்பு சீறி சிதறும் ஆபத்து. அதில் ஒரே ஒருவர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே அசத்தினார். ஆம், ஸ்பூன்களை வீசிவிட்டு கையால் எடுத்து, கடித்து, மென்று சாப்பிட்டு 'எங்கேப்பா ஐஸ்கிரீம்' என்று கேட்டபடி நகர்ந்தார்! மற்றவர்கள் முகம் சுளித்தனர். ஆனால், பிறர் மத்தியிலும் தனக்காக சாப்பிட்டவர் அவர் ஒருவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

குறை சொல்வது, பொறாமைப்படுவது, அவசரப்பட்டு பேசுவது, ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடன் அப்படியே நம்பி விடுவது போன்றவை மனிதனின் பலவீனங்கள். நம் பண்புகளையும், உழைப்பையும், வெற்றியையும் அவ்வளவு சீக்கிரம் சக மனிதர்கள் நம்பி ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில்லை. 'மற்றவர்' என்று நாம் கருதும் அந்த மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில் பிறர் பார்வைக்கும், சொல்லுக்கும் நாம் மதிப்பளித்து அவர்கள் பார்க்கிறார்களே, அவர்கள் முன் திட்டு வாங்குகிறோமே என்றெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை.

உடைக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் கல் சிலையாவதில்லை; உருக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் தங்கம் நகையாவதில்லை, பிசையப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் மண் பாத்திரமாவதில்லை; அடித்து, துவைக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் துணி சுத்தமாவதில்லை; நம் குறைகள் நம்மிடமிருந்து நீங்க, நமக்கு வேண்டியவர்கள் நம்மை கையாளும் போதுதான் நம் அறிவு முழுமையாகிறது. இதை யார் பார்த்தால் என்ன? எங்கு பார்த்தால் என்ன? நம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஒரு விஷயம் நிஜ கவுரவமா அல்லது போலி கவுரவமா என்பதுதான் கேள்வி.

போலிக் கவுரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம். உண்மையில்லாத பட்சத்தில், நம்மை நோக்கி வந்து விழுகிற பழிச்சொற்கள் அசிங்கமல்ல; அதை பிறர் பார்த்தால் ஏற்படுகிற அவமானமும் நமக்கல்ல!!

தூக்கம் விற்ற காசுகள்

சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா...

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?

தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தூனூடே
விற்றுவிட்டு கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!

மரஉச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
கண்ணாமூச்சி - பம்பரம் - கிட்டிபுல் - கோலி - பட்டம் என
சீசன் விளையாட்டுக்கள்!

ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர்
உலககோப்பை கிரிக்கெட்!

இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!

பழையசடங்குகள்
மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!

சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!

இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும்"
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான்!

காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!

ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே...
கரைந்துவிடுகிறார்கள்;!

"இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு.....
முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ?

ஒவ்வொருமுறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு

இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்

அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்.....
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!

ஞாயிறு, 11 ஜூலை, 2010

சமூகப் பார்வை....

ஏக இறைவனின் திரு பெயரால்
இந்த வலைத்தளம் காண வருகை புரியும் என் அருமை சகோதரர்களே !
உங்கள் அனைவரையும் ஒருகணம் அன்பு சலாம் கூறி வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்...
இந்த வலைப்பூவின் நோக்கமே, எல்லா தேசத்திலும் நிறைந்திருக்கும் எமது ஊரின் அன்பு உடன்பிறப்புகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பது தான்,இந்த வலைபூவினை முழுக்க முழுக்க எம் ஊரின் நலனுக்காக எம் ஊர் மக்கள் புறத்திலிருந்து அவர்களின் சிந்தனைகளை ஒருங்கிணைத்து துளிர் விடும் சிறார்களின் எதிர்கால நன்மைகளை கருத்தில் கொண்டு அவர்களின் வளர்சிக்காக சிறு கருத்து பரிமாற்றங்களை ஏற்படுத்தி அவர்களின் சிந்தனைகளை தூண்டி அவர்களின் மனதில் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் ஆவல்.....

ஏன் இப்போது என்ன அவசியம்? என நீங்கள் வின எழுப்ப விரும்பினால்,,ஆம் அவசியமே என்பது எனது பதில்..
ஏன் என்றால் காலம் சுழழும் வேகம் தனில் கல்வி என்பது எத்துனை அத்தியாவசியம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று குறிப்பாக வெளிநாடு வாழ் பெருமக்கள் நன்றாக அறிந்தும் இருப்பார்கள்.ஆனால் நம்மை போன்ற கிராம பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவர்களுக்கு கல்வி என்பது எட்டா கனியாகவும்,எட்டு சுரைக்கயாகவுமாய் இன்று உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை,இதற்க்கு நமது சிறார்களுக்கு சரியான கல்வி வழிகாட்டல்களை அவர்களுக்கு முன் சென்ற சமூகம் ஏற்படுத்தி தரவில்லை என்பது தான் எமது ஆதங்கம்.கட்டு கடங்காமல் காட்டாற்று வெள்ளமாய் சுற்றி திரியும் அவர்களின் அறிவை அழகாய் ஒரு ஆணை ஏற்படுத்தி ஒருங்கிணைக்க ஒரு நல்ல வழிகாட்டியாய் முன் சென்ற பட்டதாரி படித்த சமூகம் வரவும் இல்லை,தம் சொந்த ஊரின் தங்க தம்பிகளை அரவணைக்க அவர்கள் தயாராய் என்றும் இருந்ததில்லை என்பதும் ஒரு வேதனையான உண்மை.இதன் விளைவு இன்று கல்வி தரும் பயன்பாடுகளை அறியாமல் பள்ளி படிப்போடு முழுக்கு போட்டு சுற்றி திரியும் பிள்ளைகளும், கல்வியினை வெறும் பெயருக்கு பின்னால் போட்டு கொள்ளும் ஒரு அடையாளமாகவுமே காணும் நம் புறத்து இளையோர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பின்னர் வெளி நாடு செல்லும்போது அயலார்களின் வேகத்திற்கு ஏற்ப தன் அறிவை ஈடு செய்ய முடியாமல் தடுமாறி ஏதோ வந்தோம் ஏதேனும் செய்வோம் என்ற ரீதியில் ஏதோ தனது கல்விக்கு சம்பந்தமே இல்லாத ஒரு துறையை தெரிவு செய்து காலம் முழுதும் விடுபட முடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வேறு சிலரோ வெளிநாடு தான் வாழ்க்கை என்ற ஒரே தார்மீக குறிகோளில் கையில் கடவு சீட்டோடு தன்னை பத்தாம் வகுப்பிலேயே தயார்படுத்தி கொண்டு கொட்டி கிடக்கும் வளைகுடாவில் வாரி கட்டி கொண்டு வந்து விடலாம் என்ற மாயையோடு இருந்து விடுகின்றனர்..ஏன்? ஏன்|? இந்த இழிநிலை எம் பிள்ளைகளுக்கு என்று முன் சென்ற படித்த சமூகம் என்றாவது நினைத்ததுண்டா? குறைந்த பட்சம் தான் தம்பிகளுக்கு அவர்கள் ஏதேனும் சிறு துளியேனும் வழிகாட்டியதுண்டா?
எமது ஊரில் குறைந்தது ஒரு முப்பதுக்கும் மேற்பட்ட பட்டதாரிகலாவது உண்டு இவர்களில் பெரும்பாலானோர் அயல் நாடுகளில் நல்ல தொரு துறையில் பனிபுரிபவர்களாய் உள்ளனர்.இவர்களில் யாரும் ஊர் வரும் போது இந்த இந்த துறைகளில் வேலை வைப்புகள் உள்ளன இதனை தேர்ந்தெடுங்கள் இதனை பயிலுங்கள் என யாருக்கும் கூறுவதில்லை,தான் எவ்வாறு செயல்பட்டு வெற்றி கண்டோம் என்பதையும் கூறுவதில்லை மொத்தத்தில் இளைய சமூகத்தின் வெற்றிக்கான வழி காட்டியாய் அவர்கள் ஒரு போதும் இருந்ததில்லை என்பதே எமது ஆதங்கம்! இத்துணை பட்டதாரிகள் இருந்தும் எமது ஊரில் இன்னும் ஒரு பட்டாதாரி குழுமம் கூட இருக்க வில்லை அதற்க்கான முயற்சியை யாரும் செய்வதும் இல்லை?பின்னர் எவ்வாறு நம் ஊரில் இருந்து தேசத்திற்கு புகழ் சொல்லும ஒரு இளைஞனை உருவாக்க முடியும்,சிரார்கின் மத்தியில் எவ்வாறு சிந்தனை விதைகளை தூவ முடியும்,அவர்களின் சிந்தனையை எவ்வாறு ஒரு முக படுத்த முடியும்? நம் குடும்பம் பற்றி நாம் சிந்திக்கும் அதே வேலையில்
நம் ஊர் பிள்ளைகளின் எதிர் காலம் பற்றி சிறு துளியேனும் நினைத்தால் தானே ஒரு பேரு வெள்ளமாய் மாறுவதற்கான வல்லமை ஏற்படும்..இத்துனை தலை முறை பெருமை கொண்ட நம் ஊரில் இரு தலை முறைக்கு முன்பு தான் பொறியியல் பட்டதாரிகளாய் உருவெடுத்துள்ளனர் என்பது கொஞ்சம் முன் சென்ற சமூகம் யோசிக்க வேண்டிய விஷயம் தான் ..இந்த நிலை மாறி நம் ஊரில் அணைத்து பிள்ளைகளுமே படித்த பட்டதாரிகளாய் நம் ஊரின் பெருமை சொல்லும் தங்க செல்வங்களாய் வளர வேண்டும் இன்ஷா அல்லா அந்த நாளை ஏக இறைவன் விரைவிலேயே ஏற்படுத்தி தர வேணும் என வேண்டி கொள்வோமாக .
.இன்ஷா அல்லா தொடர்வேன்.....